One More Cinema#1
avatar
New Member
2/6/2014, 2:58 pm
சென்னை: முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக அஜித் - கவுதம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படக்குழுவினர் சிலர் கைதானதாக வெளியான தகவல் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது.

கவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது.

இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பு காரணமாக அப்பகுதி மக்களின் தூக்கம் பாதிக்கப்பட்டதாக நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தந்ததாகவும், இதனால், முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக தயாரிப்பு மேலாளர், அவரின் உதவியாளர் மற்றும் லைட் பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

ஆனால், அச்செய்திகளில் உண்மையில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக முன் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்தப் பட்டதாகவும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும், இதுவரை யாரும் தங்கள் மீது புகார் அளிக்கவில்லை, போலீசாரும் யாரையும் கைதும் செய்யவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்அனுமதியோடே நடந்ததாம் அஜித் பட ஷூட்டிங்... யாரும் கைதாகவில்லையாம்!

Posted In: One More Cinema

Topic No: 241


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO