இந்த வெள்ளிக்கிழமை ஒரேயொரு படம்தான் வெளியாகிறது. அது பொன்விழா இயக்குநர் மணிவண்ணனின் நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை 2).
1994-ல் வெளியான வெற்றிப் படம் அமைதிப்படை. சத்யராஜ் இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். குறிப்பாக அதில் அமாவாசை என்ற பெயரில் அறிமுகமாகி நாகராஜசோழன் எம்ஏ -வாக தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்வார்.
அந்த வேடத்தை மிக சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் மணிவண்ணன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் படத்தின் தொடர்ச்சியாக நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ -வை உருவாக்கியுள்ளார் மணிவண்ணன்.
கோமல் சர்மா, மிருதுளா, அன்ஷிபா மற்றும் வர்ஷா இந்தப் படத்தில் முக்கிய பெண் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் கதை முழுக்க அரசியல் களம்தான் என்றாலும், ஈழத்தில் நடந்த அவலங்களை உருவகப்படுத்தும் காட்சிகளை வைத்துள்ளார் மணிவண்ணன். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வி ஹவுஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
படத்துக்கு கிடைத்த நல்ல பப்ளிசிட்டி மற்றும் இயக்குநர் மணிவண்ணன் மீதான எதிர்ப்பார்ப்பு காரணமாக நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது. இன்று முதல் நாளே பிரமாண்ட ஓபனிங் கிடைத்துள்ளது படத்துக்கு. அந்த உற்சாகத்துடன் மணிவண்ணன் தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.
1994-ல் வெளியான வெற்றிப் படம் அமைதிப்படை. சத்யராஜ் இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். குறிப்பாக அதில் அமாவாசை என்ற பெயரில் அறிமுகமாகி நாகராஜசோழன் எம்ஏ -வாக தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்வார்.
அந்த வேடத்தை மிக சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் மணிவண்ணன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் படத்தின் தொடர்ச்சியாக நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ -வை உருவாக்கியுள்ளார் மணிவண்ணன்.
கோமல் சர்மா, மிருதுளா, அன்ஷிபா மற்றும் வர்ஷா இந்தப் படத்தில் முக்கிய பெண் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் கதை முழுக்க அரசியல் களம்தான் என்றாலும், ஈழத்தில் நடந்த அவலங்களை உருவகப்படுத்தும் காட்சிகளை வைத்துள்ளார் மணிவண்ணன். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வி ஹவுஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
படத்துக்கு கிடைத்த நல்ல பப்ளிசிட்டி மற்றும் இயக்குநர் மணிவண்ணன் மீதான எதிர்ப்பார்ப்பு காரணமாக நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது. இன்று முதல் நாளே பிரமாண்ட ஓபனிங் கிடைத்துள்ளது படத்துக்கு. அந்த உற்சாகத்துடன் மணிவண்ணன் தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.